Home

செய்திகள்

பாடசாலைக்கு முன்பாக மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து போராட்டம்

No Comments Uncategorized

ஹட்டன் பிராந்திய கல்வி திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற சிங்கள மகா வித்தியாலயத்திற்கு உடனடியாக அதிபரை நியமிக்குமாறு கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இன்று பாடசாலைக்கு முன்பாக போராட்டம் நடத்தினர்.

மஸ்கெலியா சாமிமலை, தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள சிங்கள மகா வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டு முதல் 11 ஆண்டு வரையான 150 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

பாடசாலையில் பணியாற்றிய பழைய அதிபர் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதாகவும், ஆனால் இதுவரையில் புதிய அதிபர் நியமிக்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

தமது பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை மட்டுமன்றி, பாடசாலையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஹட்டன் பிராந்திய கல்வி திணைக்களத்திற்கு பலமுறை முறைப்பாடு செய்தும் இதுவரையில் எந்த தீர்வும் காணப்படவில்லை என்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையிலேயே பெற்றோரும் மாணவர்களும் ஒன்றிணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *